ஒளியும், நிழலும்
நாம் எங்கு சென்றாலும் இயற்கை ஒளியின் கவிதை என் கண்களை பிரமிக்கவைக்கும்.
அவ்வாறு நான் கண்ட ஒளியின் கவிதையை என் கண்முன் நிறுத்தி பார்த்தேன் அதன் அழகு மனதில் தென்றலாய் வீசியது!!!
நான் வாழ்க்கையில் சந்தித்த சில சுவாரஸ்யமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் பெயர் சிவப்ரியா. நான் இவரிடம் ஒளியும், நிழலும் என்ற தலைப்பில் சில உருவப்படம் எடுக்கலாம் என்று பேசினேன். நான் கண்ட ஒளியின் அழகை அவர் வீட்டில் உருவாக்கி அதன் மூலமாக ஒரு புகைப்பட கட்டுரை என் கேமரா மூலமாக எழுதினேன்.